Tuesday, April 12, 2011

"ஜீரோ' ரூபாய் நோட்டைக்கொடுத்து ஓட்டு சேகரிக்கும் வேட்பாளர்

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=221662

தூத்துக்குடி: தூத்துக்குடி தொகுதியில் மக்கள் சக்தி கட்சி சார்பில் "விசில்' சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் ஆதிநாராயணன், வாக்காளர்களிடம் ஜீரோ ரூபாய் நோட்டைக்கொடுத்து, ஓட்டு சேகரித்துவருகிறார். ஊழல் ஒழித்து நல்லாட்சி அமைப்போம், நமது ஓட்டு விற்பனைக்கு அல்ல, தன்மானம் இழப்பதற்கு அல்ல என்ற வாசகங்களுடன், கலர் பேப்பரில் காந்தி படத்துடன் அச்சடிக்கப்பட்ட மதிப்பில்லாத ஜீரோ ரூபாய் நோட்டை(நிஜ ரூபாய் போல தோற்றம் கொண்டது) வாக்காளர்களிடம் தந்து ஓட்டு கேட்கிறார். தன்னை தேர்ந்தெடுத்தால் மது, லஞ்ச- ஊழலை ஒழித்து, கிராம சுயாட்சி, தரமான கல்வி, மருத்துவம் போன்றவற்றை தருவதாக வாக்குறுதியளித்துவருகிறார். இவரின் வித்தியாச பிரசாரம், வாக்காளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. 

No comments:

Post a Comment