Thursday, December 9, 2010

ஊழலை மறைக்க இலவசங்கள் ஊழல் ஒழிப்பு நாளில் ஆவேசம்

Dinamalar Videos - Breaking News videos, Live News Videos, News Videos Online, Latest Video

மானம் கெட்ட முதல்வர். நமீதாவுக்கு முதல்வர் கருணாநிதி வைத்த பெயர்

From Dinamalar Article

நமீதாவுக்கு முதல்வர் கருணாநிதி வைத்த பெயர்
*****************************************************
மனோகரா படத்தில் கொடூரமான வில்லி கேரக்டருக்கு வசந்த சேனை என்று பெயர் சூட்டிய முதல்வர் கருணாநிதி, தனது இளைஞர் படத்தில் வில்லியாக நடிக்கும் நமீதாவுக்கு சேனை என்று பெயரிட்டிருக்கிறார். டைரக்டர் சுரேஷ் கிருஷ்ணாவின் 50வது படம் இளைஞன். முதல்வர் கருணாநிதி கதை, வசனத்தில், உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இப்படம் பொங்கல் தினத்தில் ரீலிஸ் ஆகவிருக்கிறது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. இதில் முதல்வர் கருணாநிதி கருணாநிதி கலந்து 
கொண்டு இசை குறுந்தகடை வெளியிட்டார்.

இளைஞனை பார்த்து விட்டு "தமிழ் படம் எடுப்பேன்னு பார்த்தா ஒரு இங்கிலீஷ் படமே எடுத்திருக்கியே!" என்று சுரேஷ் கிருஷ்ணாவை முதல்வர் பாராட்டியிருக்கிறார். அந்த சந்தோஷத்தில் இருந்து மீளான அவர் இளைஞன் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். படத்தின் கதைக்களம் கப்பல் கட்டும் துறைமுகமா இருந்தா நல்லாயிருக்கும்னு சொன்னார் கலைஞர். நிறைய செலவாகுமே என்றேன். பக்கத்திலிருந்த தயாரிப்பாளர் மார்ட்டின் செலவு ஒரு பிரச்சனையே இல்லை. கலைஞர் என்ன நினைக்கிறாரோ அது ஸ்கீரின்ல வரணும்னு சொன்னார். அப்புறம் என்ன? இந்த படம் இங்கிலீஷ் படம் மாதிரி பிரமாண்டமா வந்திருக்கு. பென்ஹர் மாதிரி படங்கள் எடுத்த ஸ்டுடியோவுல இளைஞன் எடுத்திருக்கோம். இங்கிருந்து எங்களோட வந்திருந்த டெக்னீஷியன்கள் அந்த ஸ்டுடியோவுல கால் வச்சதுமே கண் கலங்கிட்டாங்க, என்கிறார் சுரேஷ் கிருஷ்ணா.

கடைசி படம் ஓடவில்லை என்பதால் விரக்தியில் இருந்த நேரத்தில்தான் நமீதாவை இந்த படத்தில் நடிக்க அழைத்திருக்கிறார்கள். வில்லி கேரக்டர் என்பதும் சம்மதிக்காமல் இழுத்தடித்த நமீதாவை முதல்வர் கருணாநிதியே போன் செய்து அழைத்திருக்கிறார். முதல்வரின் அழைப்பென்றால் சும்மாவா.... மறு பேச்சேதும் பேசாமல் டபுள் ஓ.கே. சொல்லி களத்தில் இறங்கிவிட்டாராம் நமீ. இளைஞனில் நமீதாவின் கேரக்டர் பெயர் சேனை. மனோகரா படத்தில் வசந்த சேனை என்ற கொடூரமான வில்லியை காட்டிய கலைஞர், அந்த தாக்கத்தில்தான் நமீதா கேரக்டருக்கு இப்படியொரு பெயரை முதல்வர் வைத்தார் என்பது கூடுதல் தகவல்

Wednesday, December 1, 2010

தெருக்கோடியில் இருந்து இந்தியக் கோடீஸ்வரராக மாறிய கருணாநிதி

தெருக்கோடியில் இருந்து இந்தியக் கோடீஸ்வரராக மாறிய கருணாநிதி 


கருணாநிதியின் தனக்கு தானே எழுதிக் கொண்ட நெஞ்சுக்கு நீதி புத்தகத்தில் 


பக்கம் 80 ல் கூறியிருப்பதை பார்க்கலாம். 
*1944 ம் ஆண்டு எனக்கும், பத்மாவதிக்கும் திருமணம் நடைபெற்றது. ஓராண்டு காலம் வரையில் வாழ்க்கையின் சுவைபடலம் பேரானந்தமாகத்தான் போய்க் கொண்டிருந்தது. எனக்கு நிரந்தர வேலை எதுவும் இல்லை. இதனால், மனஅமைதி குறைய தலைப்பட்டது. இப்படியே வேலை இல்லாமல் திரிந்து கொண்டிருந்தால், வாழும் காலம் எப்படி போய் முடிவது? என்ற கேள்விகள் எல்லா பக்கங்களிலிருந்தும் கிளம்பின. ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் வேலை தேடி அலைந்தேன். வாழ்வதற்கு என்ன வழி என்று தீவிரமாக யோசிக்க தொடங்கினேன். அதன் விளைவு நாடக நடிகனாக ஆனேன். இவ்வாறு தனது புத்தகத்தில் எழுதியிருக்கிறார் கருணாநிதி. 


பக்கம் 81,82 ல்.............. 
*விழுப்புரத்தில் ஒரு வாடகை வீட்டில் தங்கியிருந்தோம். அங்கு அறைகுறையாக உணவு கிடைக்கும். குளிப்பது என்பது அங்கு மிகவும் பெரிய பிரச்சனை. நாங்கள் குடியிருந்த இடத்திலிருந்து குளிக்க வேண்டுமென்றால், 1 கி.மீட்டர் தூரமாவது செல்ல வேண்டும். வயலுக்கு தண்ணீர் பாய்ச்சப்படும் இடங்களில் தான் எங்களது குளியல். அந்த குழாய் தான் எங்களுக்கு குற்றால அருவி. குடிநீர் எல்லாம். குளித்து விட்டு வீட்டுக்கு கிளம்புவோம். கடுமையான வெயில் கொளுத்தும். சிறிய துண்டை இடையில் கட்டிக் கொண்டு, துவைத்த சட்டையை தோளில் உலரப் போட்டுக் கொண்டு சவுக்கார சோப்பினால் வெண்மையாக மாற்றப்பட்ட வேட்டியை, இரு கைகளாலும் தலைக்கு மேலே குடை போல பிடித்துக் கொண்டு அதனை உலர வைத்தவாறு வீட்டிற்கு வந்து உலர்ந்த பின் அவற்றை அணிந்து கொண்டு பிற்பகல் உணவிற்கு தவமிருப்போம். 


இதற்கடுத்து, 92,93 ம் பக்கங்களில்................ 
* பெரியாரின் ஈரோட்டு குடியரசு பத்திரிகை அலுவலகத்தில் துணை ஆசிரியராக பணியாற்றும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. மாதம் சம்பளம் 40 ரூபாய். அதிலும் பிற்பகலும், இரவும் பெரியார் வீட்டில் சாப்பிடுவதற்காக இருபது ரூபாய் பிடித்துக் கொள்வார்கள். காலை, மாலை சிற்றுண்டிக்காக மாதம் 10 ரூபாய் போய் விடும். எனது இதர செலவுகள் ஐந்து ரூபாய். மீதம் 5 ரூபாயை தான் என்னை நம்பி அண்டி வந்த அருமை மனைவி பதமாவதிக்கு மாதந்தோறும் திருவாரூக்கு மணியார்டர் செய்வேன். 


பக்கம் 92,93 ல்.............................. 
* பெரிய அளவில் வைத்திய உதவிகளை எனது தந்தையாருக்கு செய்ய வசதியான நிலையில் குடும்பம் இல்லை. என் தந்தை இறந்து விட்டார். 


இப்படி கருணாநிதி எழுதிவைத்துள்ளார். 


இன்றைக்கு கருணாநிதி குடும்பத்தின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? 


1. கருணாநிதியின் கோபாலபுரம் வீடு 
2. முரசொலி மாறனின் வீடு-கோபாலபுரம் 
3. கிருஷ்ணன் கோவில் அருகில்-உறவினர்களின் வீடு 
4. முரசொலி செல்வம், செல்வி வீடு- கோபாலபுரம் ( கருணாநிதியால் கொடுக்கப்பட்டது) 
5. மு.க.முத்து வீடு-கோபாலபுரம் 
6. ஸ்வர்ணம் வீடு- கோபாலபுரம் 
7. அமிர்தம் வீடு- கோபாலபுரம் 
8. எழிலரசி வீடு ( முரசொலி செல்வத்தின் மகள்) -கோபாலபுரம் 
9. ஆலிவர் சாலையில் ராஜாத்தி அம்மாள் வீடு 
10. மு.க.ஸ்டாலின் வீடு- வேளச்சேரி 
11. உதயாநிதி பொழுது போக்கு வீடு- ஸ்னோபவுலிங்- நுங்கம்பாக்கம் 
12. உதயநிதி தீம்பார்க்- (மாமல்லபுரம் அருகில்) 
13. பில்லியர்ட்ஸ் மையம் ( வேளச்சேரி) 
14. கலாநிதி மாறன் வீடு (அடையாறு போட்கிளப் ரோடு) 
15. தயாநிதி மாறன் வீடு 
16. டிஸ்கோ- குவாலிட்டி இன் அருணா, அமைந்தகரை 
17. கொட்டி வாக்கத்தில் மாறனின் பண்ணை வீடு 
18. டிஸ்கோ- எத்திராஜ் காலேஜ் எதிரில் 
19. டெலிபோன் எக்சேஞ்ச் கட்டிடம் -நீலாங்கரை 
20. எம்.எஸ் இன்டஸ்ட்ரீஸ்- ராமச்சந்திரா மருத்துவக்கல்லூரி போரூர் அருகில் 
21. முரசொலி கட்டிடம்- அண்ணாசாலை 
22. சுமங்கலி கேபிள் கட்டிடம்- கோடம்பாக்கம் மேம்பாலம் 
23. ராஜா அண்ணாமலை புரம் எம். ஆர்.சி நகரில் சன் தொலைக்காட்சிக்காக 32 கிரவுண்ட் நிலம் 
25. சன்டிவியின் புதிய அப்-லிங்க் ஸ்டேசன்( கோடம்பாக்கம்)- மாதவன் நாயர் காலணி 
26. இந்தியா சிமெண்ட்ஸ் பங்கு, சிமிண்ட் விலையை உயர்த்துவதற்காக 
27. கோரமண்டல் சிமிண்ட் ஏற்படுத்தப்பட்டது 
28. கூன் ஹுண்டாய்- அம்பத்தூர்- அண்ணாநகர்-அண்ணாசாலை 
29. அந்தமான் தீவின் நிலங்கள் 
30. அஸ்ஸாம் மாநிலத்தில் டீ, காபி தோட்டங்கள் 
31. அம்பானியின் உரத்தொழிற்சாலையில் பங்கு 
32. மேற்குவங்காளத்தில் தோல் தொழிற்சாலை 
33. ஸ்டெர்லிங் சிவசங்கரனுடன் கூட்டு தொழில் 
34. ஆந்திரா பார்டர் சிமெண்ட் ஏற்படுத்தப்பட்டது 
35. பெண்டோபர் நிறுவனத்துடன் கூட்டு 
36. கேரளாவில் மாமன், மாப்பிள்ளை நிறுவனத்துடன் காப்பி, மற்றும் ரப்பர் தோட்டங்கள் 
37. செல்வம் வீடு 
38. முக.ஸ்டாலின் சொத்துக்கள் 
39. கருணாநிதி சொத்துக்கள்- திருவாரூர், காட்டூர், திருகுவளை. 
40. முக.அழகிரி- மதுரை, திண்டுக்கல், கொடைக்கானல், மேலூர் சொத்துக்கள், மதுரை நகரின் வீடியே பார்லர்கள், கடைகள், ஸ்கேன் சென்டர்கள் உள்ளிட்ட பண்ணை வீடுகள் 
41. செல்வம் வீடு-பெங்களுர் 
42. உதயா டிவி இணைப்பு- பெங்களூர் 
43. பூங்சி டிரஸ்ஸஸ்- பீட்டர்ஸ் சாலை 
44.முக.தமிழரசன்- ரெயின்போ பிரிண்டர்ஸ், இந்திரா கார்டன்- சென்னை பீட்டர்ஸ் சாலை. 
45. முக.தமிழரசன்- அந்தியூரில் உள்ள சொத்துக்கள் 
46. தலைப்பாக்கடடு பிரியாணி சென்டர்- தி.நகர், ஜி.என்.செட்டி சாலை, சென்னை. 
47. கோவையில் உள்ள டிபார்ட்மெண்டல் ஸ்டோர் 
48. மல்லிகா மாறனின் உறவினர்களின் பெயரில் கும்பகோணம், மயிலாடுதுறை, திருவாரூர் மற்றும் சென்னையில் சொத்துக்கள். 
49 .Additional properties after semmuzi coimbatore farm house 
50. Broke bond land in coimbatore (given to rental for RMKV silks) extra extra extra extra இங்கு அழகிரி, கனிமொழியின் சொத்துக்கள் சேர்க்கப்படவில்லை. 


திருவாரூரில் இருந்து கட்டிய வேட்டியும், தோளில் போட்ட துண்டுடன் , சென்னை நகருக்கு கள்ள ரயில் ஏறிவந்த கருணாநிதி குடும்பம் இன்று இந்திய பணக்காரர்கள் பட்டியலில். 


வாழ்க தமிழ்நாடு. 


வாழ்க வந்தாரை வாழழழழழழ வைக்கும் தமிழ்மக்கள்......