Friday, January 28, 2011

சோனியா. இத்தாலி மாஃபியா. ஆனந்த விகடன்


நன்றி ஆனந்த விகடன்


சோனியா ...இத்தாலி மாஃபியா

சோனியாவை 'சொக்கத் தங்கம்’ என்ற அடைமொழியுடன்தான் அழைப்பார் முதல்வர் கருணாநிதி. ஆனால், 'ஊழல் உலோகம்’ என்று சோனியாவை அழைக்க ஆரம்பித்திருக்கிறார்கள் டெல்லிப் பத்திரிகையாளர்கள்.

125 ஆண்டுகளைக் கடந்த காங்கிரஸ் கட்சி, இன்று நித்தமும் ஊழல், முறைகேடுகளுக்கு விளக்கம் சொல்வதை மட்டுமே தனது வேலையாக வைத்திருக்கிறது. வெள்ளையர் களை விரட்டியதே இவர்கள் பங்கு பிரிக்கத் தானோ என்று அச்சம்கொள்ளும் அளவுக்கு ஊழல் குற்றச்சாட்டுகள் குவிய ஆரம்பித்து இருக்கின்றன. ஊழலே நடக்காமல் தடுக்க, சோனியாவால் முடியாது. ஆனால், அது வெளிச்சத்துக்கு வந்த பிறகேனும், உறுதியான நடவடிக்கை களை எடுத்திருக்க வேண்டும். நடவ டிக்கை எடுக்காதது மட்டுமல்ல; அதை மறைக்கும் காரியங்களும் சோனியா ஆசீர்வாதங்களுடன் நடப்பதுதான் இந்திரா காங்கிரஸுக்கு 'கரப்ஷன் காங்கிரஸ்’ என்று பட்டம் சூட்டக் காரணமாகிறது!

'ஊழலைப் பொறுத்துக்கொள்ளவே முடியாது. ஊழல் மற்றும் தவறான நடவடிக்கை எதுவாக இருந்தாலும், காங்கிரஸ் கட்சி அதைப் பொறுத்துக் கொள்ளாது. அதிகப்படியான எளிமை யும் கட்டுப்பாடும் நம்முடைய வழி களாக இருக்க வேண்டும். அதிகப்படியான சொத்துக்கள் மற்றும் வசதி வாய்ப்பைவெளிப் படுத்தும் வகையில் காங்கிரஸ்காரர்கள் நடந்து கொள்ளக் கூடாது. அதன் மூலம் மற்றவர்கள் கண்களை உறுத்துவதையோ, மற்றவர்க்குப் பொறாமை ஏற்படுத்துவதையோ அனுமதிக்கக் கூடாது. பொது வாழ்வில் ஈடுபடுவோர், அரசியல் வாதிகள் மீதான அனைத்து ஊழல் வழக்கு களும் குறிப்பிட்ட காலத்துக்குள்விசாரிக்கப் பட வேண்டும்!’ - சொன்னவர் மகாத்மா காந்தி அல்ல; சோனியா காந்தியேதான்!

30 நாட்களுக்கு முன் நடந்த அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில்தான் இப்படி முழங்கி னார் சோனியா. ஆனால், இந்த ஒரு மாதத்துக் குள் காங்கிரஸுக்கு எதிரான அத்தனை வழக்குகளையும் முடிந்த அளவுக்கு ஆறப் போட்டுவைக்கவும் காரணம், இதே சோனியாவே!

நம்பர் 10, ஜன்பத் வீட்டு ஊறுகாய்ப் பானைக்குள் ஊறப்போடப்பட்டுவிட்ட வழக்குகளின் கதையைவைத்து ஊழல் பாரதம் படைக்கலாம். ஸ்பெக்ட்ரம் முதல் போஃபர்ஸ் வரை அனைத்தும் நம் கண்ணுக்கு முன்னால் தேய்பிறை ஆகிக்கொண்டே இருக்கின்றன!

புஸ் ஆகும் ஸ்பெக்ட்ரம்! 

இந்திய தேசம் இதுவரை சந்திக்காத மிகப் பெரிய அவமானம்... ஸ்பெக்ட்ரம் 2ஜி அலை வரிசை ஒதுக்கீட்டு ஊழல். அரசாங்கக் கணக்குக்கு வந்தாக வேண்டிய பணத்தைச் சில தனி மனிதர்கள் தங்களது சொந்த சுக போகங் களுக்குத் திருப்பிக்கொண்டார்கள் என்ற குற்றச்சாட்டை மத்திய ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு ஆணையம் தன்னுடைய தாக்கீ தாக பிரதமர் மன்மோகன் சிங்குக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் தந்தது.

'சுமார் 22 ஆயிரம் கோடி ரூபாய் பணம் கைமாறி உள்ளது!’ என்று அவர்கள் குற்றம்சாட்ட... அதில் முகாந்திரம் இருப்பதாகச் சந்தேகப்பட்ட பிரதமர், வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்த சி.பி.ஐ-க்குக் கட்டளை இட்டார். ஓர் ஆண்டு காலம் அவர்கள் 'அமைதியாக’ விசாரித்து வந்தார்கள். அதற்குள் மத்தியக் கணக்கு மற்றும் தணிக்கைத் துறை தன்னுடைய அறிக்கையை வெளியிட்டது. 'முறைப்படி, விதிமுறைகளை ஒழுங்காகப் பின்பற்றி இந்த அலைக்கற்றைகளைக் கொடுத்து இருந்தால், 1.76 லட்சம் கோடி வரை அரசாங்கத்துக்கு லாபம் கிடைத்திருக்கும்!’ என்று சி.ஏ.ஜி. கூறியது. எதிர்க் கட்சிகள் இதைச் சிக்கெனப் பிடித்துக்கொண்டன.

நாடாளுமன்றத்தை நடத்த முடியாத அளவுக்கு ஸ்பெக்ட்ரம் நாறியது. அந்தத் துறை அமைச்சராக இருந்த ஆ.ராசாவை ராஜினாமா செய்யவைத்தார்கள். எதிர்க் கட்சிகளையும் உச்ச நீதிமன்றத்தையும் இதன் மூலம் அமைதியாக்கிவிட காங்கிரஸ் நினைத்தது. ஆ.ராசா முதல் அவரது பினாமிகள் வீடுகள் வரை சி.பி.ஐ. ரெய்டு போனது. அவரே கடுமையான விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். இவை எல்லாமே டிசம்பர் சீஸனாக முடிந்து போனது.

''அலைக்கற்றை ஒதுக்கீட்டால் அரசாங்கத் துக்கு ஒரு பைசாகூட இழப்பு இல்லை!'' என்று பேச ஆரம்பித்தார், ராசாவுக்குப் பிறகு அந்தத் துறைக்குப் பொறுப்பேற்றுக்கொண்ட மத்திய அமைச்சர் கபில்சிபல். ஒதுக்கீடு பெற்ற நிறுவனங்களின் உரிமம் ரத்தாகும், அவர்கள் மீது நடவடிக்கை பாயும் என்று நவம்பர் மாதம் மீடியாக்களிடம் கர்ஜித்த கபில்சிபலின் வார்த்தைகள் ஜனவரியில் தேய்ந்தன. இந்த நிறுவனங்களுக்கு ரகசிய சுற்றறிக்கை அனுப்பி ஃபைன் போடப்பட்டதாகவும், அதை அவர் கள் உடனே செலுத்தியதாகவும் கணக்குக் காட்டினார் கபில்சிபல். 'ஃபைன் கட்டியதால் பிரச்னை முடிந்தது’ என்றார்.

இது குறித்து விசாரிக்க உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சிவராஜ் பாட்டீல் தலைமை யில் விசாரணைக் கமிஷனை அமைத்தார் பிரதமர். நீதிபதிக்குத் தரப்பட்ட கால எல்லை முடிந்த பிறகும் அறிக்கை வரவில்லை. இந்த லைசென்ஸை வாங்கித் தரும் புரோக்கராகச் செயல்பட்ட நீரா ராடியாவின் பேச்சுகள் அடங்கிய டேப்புகள்பற்றி, அமைச்சரவைச் செயலாளர் கே.எம்.சந்திரசேகரிடம், அறிக்கை தாக்கல் செய்ய பிரதமர் உத்தரவிட்டார். அந்த அறிக்கையும் வந்ததாகத் தெரியவில்லை. ரெய்டு அடித்த களைப்பில் இருந்து இன்னமும் சி.பி.ஐ. அதிகாரிகள் மீளவில்லை. அவர்கள் மத்தியிலும் சுணக்கம் ஏற்பட்டுவிட்டது.

தி.மு.க-வுடன் காங்கிரஸ் கூட்டணி முடிவானதால், இந்த வழக்கு முடக்கப்பட்டதா அல்லது சுப்பிரமணியன் சாமி சொல்வதைப்போல, சோனியாவின் சகோதரிகளுக்கும் இதில் பங்கு உள்ளதா என்ற கேள்வியில் புஸ் ஆகிக்கொண்டு இருக்கிறது ஸ்பெக்ட்ரம்!

காணாமல் போகும் காமன்வெல்த்! 

உலகம் முழுக்க நம் புகழ் பரப்ப நடத்தப் பட்ட காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி யால், இந்தியாவில் ஊழல் முறைகேடுகள் எந்த அளவுக்குத் தலை விரித்து ஆடுகின்றன என்பதை வெளிச்சப்படுத்திக்கொண்டோம். டெல்லியை அழகுபடுத்துவதில் ஆரம்பித்து, விளையாட்டு வீரர்கள் தங்கும் இடத்தின் கழிவறைகள் வரை எல்லாவற்றிலும் கரன்சியை அமுக்கினார்கள்.

இந்தப் போட்டிகளின் பொறுப்பாளராக இருந்த சுரேஷ்கல்மாடி முதல், டெல்லி மாநில முதல் அமைச்சர் ஷீலா தீட்சித் வரை அனைத்துமே காங்கிரஸ் தலைகள் பெயரே அடிபட்டது. ஒரு பாலம் கட்டுவதற்கு சுமார் 300 கோடி ஆகும் என்றால், இவர்கள் கணக்குப்படி ஒரு பாலத்தைச் சீரமைக்கவே 500 கோடி வரை செலவானது. விளையாட்டு வீரர்கள் பயன்படுத்தும் அத்தனை பொருட் களையும், அடக்க விலையைக் காட்டிலும், 60 முதல் 100 மடங்கு வரை அதிக வாடகைக்கு எடுத்தார்கள். எல்லாமே கமிஷன்... எங்கு திரும்பினாலும் பினாமிகள்... என்ற குற்றச் சாட்டுகள் காமன்வெல்த் போட்டி தொடங்கும் முன்பே வெளியில் வந்தன. அமைதி காத்த சோனியா, போட்டிகள் முடிந்த பிறகு சுரேஷ் கல்மாடி மீது நடவடிக்கை எடுத்தார். சிலர் கைதாகினர். ஆனால், கல்மாடி கைதாகவில்லை. அனைத்துக்கும் காரணமான அவர் காப்பாற்றப்பட்டார். இன்று வரை காங்கிரஸ் எம்.பி-யாகவே அவர் தொடர்கிறார். இத்தனைக்குப் பிறகும், 'நான் நிரபராதி’ என்று பேட்டிகள் தந்துகொண்டு இருக்கிறார்.

அவரை மட்டுமல்ல; அந்த வழக்கையே ஒன்றும் இல்லாமல் ஆக்குவதற்காகத் திரை மறைவுக் காரியங்கள் நடக்கின்றன. அதில் முக்கியமானது, காமன்வெல்த் தொடர்பான ஆவணங்களையே காணாமல் அடித்துவிட்டது!

ஊழல் நடந்ததை நிரூபிக்கத் தேவையான டெண்டர் கோருதல், பட்ஜெட் ஒதுக்கீடு, ஒப்பந்த விவரம் ஆகிய மூன்று ஆவணங்களையும் காணவில்லை. பிறகு, எதைவைத்து குற்றச்சாட்டை நிரூபிப்பார்கள்? 'அமெரிக்காவில் இருக்கும் தன்னுடைய உறவினர் வீட்டுக்கு இந்த ஆவணங்களை கல்மாடி அனுப்பிவைத்துவிட்டார்’ என்று பெயர், முகவரியுடன் டெல்லி பத்திரிகைகள் எழுதிய பிறகும் காங்கிரஸ் அமைதி காக்கிறது!

'தாமஸ் நல்லவர்!’ 

ஊழல் தடுப்புக் கண்காணிப்பு ஆணையம் எனப்படும் விஜிலென்ஸ் கமிஷனர்தான் இந்தியாவின் எந்தப் பாகத்திலும் எந்த முறைகேடும் நடக்காமல் கண்காணிக்க வேண்டிய பெரும் பொறுப்புகொண்டவர். அந்தத் துறை ஒழுங்காகச் செயல்பட்டு இருந்தால், நாட்டில் இந்த அளவுக்கு முறை கேடுகள் நடக்க வாய்ப்பே இல்லை. அந்த ஆணையத்தின் கமிஷனராக தாமஸ் என்பவரை நியமித்தபோது, நண்டைச் சுட்டு நரியைக் காவல்வைத்த கதைதான் நினைவுக்கு வந்தது. கேரள மாநிலத்தின் சிவில் சப்ளைஸ் கமிஷனராக இருந்தபோது, பாமாயில் இறக்குமதி தொடர்பாக இவர் மீது குற்றச் சாட்டு வந்தது. சிங்கப்பூரில் இருந்து பாமாயில் இறக்குமதி செய்ய கேரள அமைச்சரவை ஒப்புதல் தருவதற்கு ஒன்பது நாட்களுக்கு முன்ன தாகவே வெளிநாட்டு கம்பெனியில் இருந்து இவர் வாங்கிவிட்டதாக சந்தேக ரேகை படிந்தது. அது தொடர்பாக வழக்குப் பதியப்பட்டது. அப்படிப்பட்டவரை விஜிலென்ஸ் கமிஷனராக எப்படி நியமிக்கலாம் என்பதுதான் உச்ச நீதிமன்றம் எழுப்பிய கேள்வி.

இந்தப் பதவிக்கு வரக்கூடியவரை பிரதமர், உள்துறை அமைச்சர், நாடாளுமன்ற எதிர்க் கட்சித் தலைவர் ஆகிய மூவரும் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். எதிர்க் கட்சித் தலைவராக இருந்த சுஷ்மா ஸ்வராஜ், தாமஸின் நியமனத்தை எதிர்த்தார். ஆனாலும், மீறி நியமிக்கப்பட்டார் தாமஸ். உச்ச நீதிமன்றம் கேள்வி கேட்ட பிறகாவது, அவரை நீக்கி வேறு ஒருவரை நியமித்து இருக்கலாம். ஆனால், சோனியாவின் பாதுகாவலரான ஜார்ஜ் மூலமாகப் பதவியைப் பிடித்தவர் தாமஸ் என்பதால், அது நடக்காமல் போனது. 'தாமஸ் சிறந்த நிர்வாகி. இம்மாதிரியான பதவியில் நியமிக்கப்படுபவரின் தகுதிகள் குறித்து உச்ச நீதிமன்றம் கேள்விகள் கேட்க முடியாது!’ என்று மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது. ஓர் அரசாங்கத்தின் நியாய தர்மங்கள் எந்த அளவுக் குத் தரம் தாழ்ந்துகொண்டு இருக்கின்றன என்பதற்கு தாமஸ் நியமனம் ஒரு சாட்சி!

வீட்டை இடித்தால் மட்டும் போதுமா? 

நாட்டைக் காக்க உயிரைக் கொடுத்த தியாகி களின் வயிற்றில் அடித்த விவகாரம்தான் ஆதர்ஷ் வீடு ஒதுக்கீட்டு ஊழல்!

கார்கில் போரில் உயிர் இழந்த வீரர்களுக்கு மும்பை கொலபா கடற்கரையில் வீடுகள் கட்ட அனுமதி தரப்பட்டது. 31 வீடுகள் ராணுவ வீரர்களுக்கும், ஒன்பது வீடுகள் பொதுமக்களுக்கும் கட்ட அனுமதி தரப்பட்டது. ஆறு மாடிகளுக்கு மேல் கட்டக் கூடாது என்பது விதி. அதை மீறி, வீட்டு எண்ணிக்கையை 71 ஆக்கினார்கள். அதன் பிறகு 91 ஆகக் கூட்டினார்கள். 6 மாடிகளை 31 மாடி களாக உயர்த்தினார்கள். மகாராஷ்டிர காங்கிரஸ் அரசு இந்தக் காரியங்களைத் தடையில்லாமல் செய்துகொடுத்தது. அரசியல்வாதிகள், ராணுவ உயர் அதிகாரிகள், ராணுவத் தளபதிகளின் உறவினர்கள், காங்கிரஸ் முதல்வர் அசோக் சவானின் சொந்தங்கள் என்று உள்ளே புகுந்து வீடுகளைக் கைப்பற்றி னார்கள். கடற்கரை மேலாண்மை விதிகள் மீறப்பட்டதைவிட... தார்மீக நெறிமுறைகள் காற்றில் பறந்தன. பத்திரிகைகள் தொடர்ச்சியாக எழுதியதற்குப் பிறகு, அசோக் சவான் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். விதிமுறைகளை மீறியது உண்மைதான் என்பதை உணர்ந்து, 31 மாடிக் கட்ட டத்தை முழுமையாக இடிக்க மத்திய அமைச்சர் ஜெயராம் ரமேஷ் உத்தரவிட்டு இருக்கிறார்.

'விதிமுறைகளை மீறிக் கட்டப்பட்ட கட்டடங்களை இடித்த பிறகு, அவ்வளவுதானே... இந்த விசாரணைகளை நிறுத்தி விட வேண்டியதுதானே?’ என்று காங்கிரஸ் தலைவர்கள் மெதுவாக முணு முணுக்கத் துவங்கி இருக்கிறார்கள்!

காப்பாற்றப்படும் கறுப்பு மனிதர்கள்! 

நேர்மையாளர் என்ற மன்மோகன் சிங்கின் முகத்திரை கறுப்புப் பணக் குவிப்பு விஷயத்தில் கிழிந்தது. மேற்கு ஐரோப்பிய நாடான வீக்டென்ஸ்டைன், வரி ஏய்ப்பாளர்களின் சொர்க்கம் என்று சொல்லப்படும். அங்கு இருக்கும் சுவிஸ், ஜெர்மன் நாட்டு நிறுவனங்கள் மற்றும் வங்கிகளில் யாரும் எவ்வளவு முதலீடும் செய்யலாம். அதற்கு கணக்குக் கேட்க மாட்டார்கள். அங்கு உள்ள எல்.டி.ஜி. வங்கியில் பணம் போட்டு உள்ளவர்களின் விவரங்களை ஜெர்மன் நாடு வாங்கி உள்ளது. அவர்களிடம் இருந்து நம்முடைய மத்திய அரசு பெற்றுள்ளது. அந்தத் தகவல்களை வெளியிட வேண்டும் என்று மூத்த வக்கீல் ராம் ஜெத்மலானி வழக்குப் போட்டார். 'நாட்டின் வளத்தைச் சூறை யாடிப் பதுக்கியவர்களின் பெயர்களை எப்படி மறைக்கலாம்?’ என்று கேட்கிறது நீதிமன்றம். 'பெயரை வெளியிட மாட்டோம் என்ற உத்தர வாதத்தின் அடிப்படையில்தான் வாங்கி இருக் கிறோம்!’ என்று மழுப்புகிறது மத்திய அரசு.

'வரி வசூல் செய்வதற்காகத்தான் இந்தப் பெயர்கள் வாங்கப்பட்டுள்ளன!’ என்று நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியிருக்கிறார். கறுப்புப் பணத்தைப் பதுக்கியவர்களை வெளியில் சொல்ல இவர்களால் முடியாது. ஏனென்றால், அந்த மனிதர் களின் தயவில்தான் காங்கிரஸ் கட்சியே இயங்கி வருகிறது என்று ராம் ஜெத்மலானி போன்றவர்கள் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்.

போஃபர்ஸ் பீரங்கியும் இத்தாலி மாஃபியாவும்! 

ராஜீவ் படத்தை வரைந்து 'பீரங்கித் திருடன்’ என்று தி.மு.க. பிரசாரம் செய்த இந்த வழக்குக்கு வயது 20. ஆனால், வழக்கு இன்னும் முதல் படியைக்கூடத் தாண்டவில்லை. போஃபர்ஸ் பீரங்கி பேர ஊழல் வழக்கில் கமிஷன் பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டார் இத்தாலி நாட்டைச் சேர்ந்த தொழிலதிபர் குவாத்ரோச்சி. இவர் மீதான குற்றச்சாட்டை நிரூபிக்க ஆதாரம் இல்லை என்று சொல்லி, வழக்கை கடந்த மாதம் திரும்பப் பெற்றுக்கொண்டது சி.பி.ஐ.

இதைக் கேட்டதும் நீதிபதி வினோத் யாதவ் ஆடிப்போய்விட்டார். 'சி.பி.ஐ. இப்படிச் செய்வதற்குத் தவறான உள்நோக்கம் இருக்க வேண்டும்!’ என்றார். எந்தக் குற்றச்சாட்டுக்குப் பதில் சொல்ல முடியாமல் ராஜீவ் காந்தி இந்தியா முழுவதும் தேர்தலில் தோற்றாரோ... அந்த வழக்கு இன்று அநாதையாக நின்றுகொண்டு இருக்கிறது. அஜய் அகர்வால் என்ற ஒரு தனி மனிதர் மட்டுமே இதைப் பேசிக்கொண்டு இருக்கிறார்.



இந்த வழக்கை மறைக்கக் காரணம், ராஜீவ் மீதான குற்றச்சாட்டு மட்டும் அல்ல. சோனியாவுக்கு நெருக்கமானவர் குவாத்ரோச்சி என்பதும் ஓர் அடிப்படைக் காரணம். 'ஆதாரம் இல்லை’ என்று சி.பி.ஐ. சொல்வதும் இதனால்தான்.



ஒரு காலத்தில் இத்தாலிதான் மாஃபியாக்களின் தலைமையிடம் என்பார்கள். சமீப கால இந்திய நிகழ்வுகள் அதை உண்மை என்று நம்பத் தூண்டுகிறது!



நன்றி ஆனந்த விகடன்

Monday, January 24, 2011

கருணாநிதி : சிறந்த ஒட்டு வங்கி அரசியல்வாதி

Comments from one of the dinamalar article
****************************************
நான் எனது விடுமுறை காலத்தில் எனது இரண்டு சக்கர வாகனத்தில் வேலூரில் இருந்து உதகமண்டலம் வரை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், கோயம்புத்தூர், மேட்டுபாளையம் வழியாக சென்றேன், நான் சென்ற இடங்களில் சந்தித்த மனிதர்களிடம் சின்ன கருத்து கணிப்பு நடத்தினேன், மருந்து கடை, பெட்ரோல் பங்க், ஹோட்டல், காய் கரிமார்க்கெட், பேங்க், டீ கடை, பல சரக்கு மளிகை கடை போன்ற இடங்களில் உள்ள மக்களிடம், இன்னும் தேர்தல் வர மூன்று மாதம் தான் உள்ளது, இந்த முறை யார் வர வேண்டும் என்று நினைக்கிறீர்கள் என்று கேட்டேன், 210 பேர் அதிமுக வர வேண்டும் என்றனர். அந்த 212 பேரில் சிலர் எல்லாரும் தான் ஊழல் செய்கிறார்கள், ஆனால் திமுக யாருமே இது வரை செய்யாத ஊழலை செய்துள்ளது, சட்டம் ஒழுங்கு, விலைவாசி பிரச்சனைக்காகவே கட்டாயம் அதிமுக வந்தாகவேண்டும் என்று கூறினர், வெறும் 38 பேர் தான் திமுக வரவேண்டும் என்றனர். 


இதிலிருந்து என்ன தெரிகிறது, ஆட்சி மாற்றம் நிச்சயம். இந்த ஆட்சியில் மாநில வளர்ச்சி திட்டம் என்ற ஒன்றே இல்லை. இலவசங்கள் தான் வளர்ச்சி திட்டம் இல்லை, ஒரு மாநிலத்திற்கு முக்கியம் சட்டம் ஒழுங்க கட்டுக்குள் வைப்பது, குடிநீர் பஞ்சம் இல்லாமல் பார்த்துகொள்வது, தங்கு தடையின்றி மின்சாரம் வழங்குவது, தரமான சாலைகள் போடுவது, சுகாதாரத்தை பேணி காப்பது, தராமான கல்வி கொடுப்பது, வேலை வாய்ப்பை அதிகபடுதுவது, சுயல் தொழில் செய்ய இளைஞர்களை ஊக்குவிப்பது, காடுகளை பாதுகாப்பது, நல்ல பேருந்து வசதி செய்து கொடுப்பது, மக்களின் ஏழ்மை நிலைமையை போக்குவது போன்றவை தான் வளர்ச்சி, நல திட்டங்கள். 


நாம் மஞ்சள் துண்டை குறை கூறி பிரயோஜனம் இல்லை, ஏன் என்றால், வளர்ச்சி திட்டம் என்பது அறிவுடனும், விவேகத்துடனும் யோசித்து போடுவது, மஞ்சள் துண்டு, அவரின் அறிவு சக்திக்கு அப்பால் அவரால் யோசிக்க முடியாது, யோசிக்கவும் தெரியாது, அவரின் அறிவுக்கு தகுந்தது, இலவசங்கள் மட்டும் தான் கொடுக்க முடியும் 


கருணாநிதிக்கு இன்னொரு பெயர் வைத்தால் நன்றாக இருக்கும், "சிறந்த ஒட்டு வங்கி அரசியல்வாதி". யார் ஒருவர் ஒட்டு வங்கியை மனதில் வைத்தே அரசியல் நடத்துகிறாரோ, அவரால் சிறந்த நிர்வாகத்தை கொடுக்க முடியாது. மத மாற்ற தடை சட்டம் கொண்டு வந்தால் சிறுபான்மையினர் வோட்டு கிடைக்காது என்று தெரிந்தும் ஜெயலலிதா மக்கள் நலனுக்காக ஹிந்து மதத்தை காப்பாற்ற அந்த சட்டத்தை கொண்டு வந்தார், இந்த துணிச்சல் கருணாநிதிக்கு உள்ளதா? அரசு ஊழியர்களை வேலை விட்டு அனுப்பினால் அவர்களின் ஒட்டு கிடைக்காது என்று தெரியும், இருந்தாலும் வேலை செய்யாமல் வெறும் கையெழுத்து மட்டும் போட்டுவிட்டு சம்பளம் வாங்கும் அரசு ஊழியர்களை மிரட்டி, இனிமேல் இப்படி தான் ஒழுங்காக வேலை செய்ய வேண்டும் என்று ஒரு வழிக்கு கொண்டுவந்தார், ஊதாரிதனாமாக வேலை செய்யாதவனுக்கு சம்பளத்தை வாரி வாரி வழங்கவில்லை, அரசு ஊழியர்கள் திமுக ஆட்சி வந்தாலே குஷியாகிவிடுவார்கள், ஏன் என்றால் வேலையே செய்யாமல் சம்பளம் வாங்கலாமே, சிறந்த நிர்வாகம் என்பது,கடன் வாங்காமல், ஆட்சி முடியும் போது அரசு கஜானாவில் எவ்வளவு பணம் கையிருப்பு உள்ளதோ அதை வைத்தே சொல்லிவிடலாம் ஆனால் இங்கோ 


ஒரு லட்சம் கோடி ரூபாய் கடன் உள்ளது, கடன் வாங்கியாவது மாநிலம் வளர்ந்திருந்தால் மகிழ்ச்சியடையலாம், கடன் வாங்கி இலவசங்கள் வழங்கபட்டுள்ளது..


2006 ஆண்டு கடைசி சட்டசபை கூட்ட தொடரில் கடன் இல்லாமல், பத்து ஆயிரம் கோடி ரூபாய் அரசு கஜானாவில் இருப்பு வைத்துள்ளதாக ஜெயலலிதா அறிக்கை சமர்பித்தார், அது நிர்வாக திறமை. இந்த குடும்ப அரசியல் மற்றும் வோட்டு வங்கி அரசியல் நடத்துபவர்களால் சிறந்த நிர்வாகத்தை கொடுக்கவே முடியாது. 


ஜெயலலிதா என்றாலே எல்லாரும் ஆணவம், திமிர் என்று கூறுகிறார்கள், உண்மையில் அது ஆணவம் அல்ல, கண்டிப்பு, தைரியம், அதனால் தான் MGR சாவுக்கு பிறகு கட்சியை காப்பாற்ற முடிந்தது, இல்லை மஞ்சள் துண்டு எப்பவோ அழித்திருப்பார். அம்மாவுக்கு இருக்கும் தைரியம், யாரை வேண்டுமானாலும் எதிர்க்கும் தைரியம் கருணாநிதிக்கு வரவே வராது. 


ஜெயலலிதவுக்கு வாரிசுகள் இல்லை, அவர் ஊழல் செய்தாலும் கடைசியில் MGR சொத்துக்களை போல மக்களுக்கே திரும்ப வரும், அந்த பணம் இந்தியாவிலே தான் இருக்கும், ஆனால் மஞ்சள் துண்டு ஊழல் பணம் மக்களுக்கு வருமா? நினைத்து பாருங்கள். அம்மா நீங்கள் ஆட்சியை பிடித்தவுடன், முதலில் இந்த இலவசங்களை நிறுத்த வேண்டும், அதற்க்கு பதிலாக மாநிலத்தை 

Saturday, January 15, 2011

விலைவாசி உயர்வு பற்றி நம்மை ஆள்பவர்களின் கருத்து

விலைவாசி உயர்வு பற்றி நம்மை ஆள்பவர்களின் கருத்து: 


முதல்வர் கருணாநிதி: வெங்காயம் விலை ஏறினால் பெரியாரை போய் கேளுங்கள். 
துணை முதல்வர் ஸ்டாலின்: இது உலக பிரச்சணை. அமைச்சர் அன்பழகன்: என் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்து கொள்ளுகிறேன். அமைச்சர் பொன்முடி: மக்களிடம் வாங்கும் சக்தி அதிகரித்து விட்டது (ஒரு வேளை இடைத்தேர்தல் நடந்த தொகுதிகளின் மக்களை குறிக்கிறாரோ?) அமைச்சர் வேலு: அதிமுக ஆட்சியிலும் விலைவாசி உயர்ந்தது

Tuesday, January 4, 2011

| இலவசங்களை லஞ்சமாக கொடுக்கிறார் முதல்வர்: ஜெயலலிதா Dinamalar

| இலவசங்களை லஞ்சமாக கொடுக்கிறார் முதல்வர்: ஜெயலலிதா Dinamalar



ஏழை மக்கள் இருக்கிற வரை தமிழகத்தில் இலவசங்கள் தொடரும் என, புத்தாண்டு தினத்தன்று முதல்வர் கருணாநிதி பேசி இருக்கிறார். வறுமையை ஒழிப்பதற்கு தன்னிடம் எந்த திட்டமும் இல்லை என்பதையும், ஏழை மக்களை பற்றிய அடிப்படை கவலை கூட தனக்கு இல்லை என்பதையும் தன்னையே அறியாமல் ஒப்புக் கொண்டிருக்கிறார் கருணாநிதி.இன்னும் சொல்லப்போனால், தமிழகத்தில் உள்ள ஏழை மக்கள் ஏழைகளாகவே இருக்க வேண்டும் என்று தான் கருணாநிதி விரும்புகிறார். அப்போது தான் சலுகைகளையும், இலவசங்களையும் லஞ்சமாக கொடுத்து, ஏழை மக்களின் ஓட்டுக்களைப் பெற முடியும் என நினைக்கிறார்.

மூன்று நூற்றாண்டுகளுக்கு முன் சீனாவை அடிபணிய வைப்பதற்காகவும், அந்நாட்டு மக்களை பிரிட்டனில் அடிமைகளாக்க வேண்டும் என்பதற்காகவும், சீனர்களுக்கு போதை மருந்தை பிரிட்டிஷார் காட்டினர். இதன் விளைவாக பிரிட்டிஷ் ஆதிக்கத்திலிருந்து சீனர்கள் விடுதலை பெற நூற்றாண்டுகளாகியது. இதுபோன்ற மேலாதிக்கம் இந்த மாநிலத்தில் உள்ள ஏழை மக்கள் மீது நிரந்தரமாக நிலை நிறுத்தப்பட வேண்டும் என கருணாநிதி விரும்புகிறார்.பொது வினியோக திட்டத்தின் மூலம் ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி கிடைக்கின்ற அதே சமயத்தில், வெங்காயத்தின் விலை 90 ரூபாய். அனைத்து காய்கறிகளும் ஒரு கிலோ 50 ரூபாய்க்கு மேல் தான் விற்கப்படுகின்றன.

சாம்பார் வைப்பதற்கு பயன்படுத்தப்படும் பருப்பின் விலை ஒரு கிலோ 100 ரூபாய். சமையல் எண்ணெயின் விலை ஒரு கிலோ 100 ரூபாய்க்கு மேல்.சமையல் காஸ் அடுப்புகள் இலவசமாக தரப்படுகின்றன. ஆனால், ஒரு சமையல் காஸ் சிலிண்டரின் விலை 400 ரூபாய். காஸ் சிலிண்டர் பதிவு செய்யப்பட்டு 98 நாட்கள் வரை வினியோகம் செய்யப்படுவதில்லை.அந்த அளவுக்கு காஸ் பற்றாக்குறை நிலவுகிறது. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. ஆனால், பல மணி நேர மின்வெட்டு மூலம் பயனாளிகளுக்கு இந்த சலுகை பயனளிப்பதில்லை.கலர் "டிவி'க்கள் இலவசமாக தரப்படுகின்றன. ஆனால், கேபிள் இணைப்புகளுக்கு அதிக செலவாகிறது. இதன் மூலம் கருணாநிதி குடும்பத்திற்கு நிரந்தர வருமானம் உறுதி செய்யப்படுகிறது. திரைப்படத் துறையை கருணாநிதி குடும்பத்தினர் கபளீகரம் செய்து விட்டனர். தமிழகத்திலும், வெளிநாடுகளிலும் கல்லூரிகளையும், நட்சத்திர ஓட்டல்களையும் கருணாநிதி குடும்பத்தினர் வாங்கி குவித்து கொண்டிருக்கின்றனர்.

சட்ட விரோத மணல் கொள்ளை கருணாநிதி குடும்பத்தினரின் ஆதிக்கத்தில் தான் இயங்குகிறது. சட்ட விரோத கிரானைட் கொள்ளையும் இவர்கள் ஆதிக்கத்தில் நடைபெறுகிறது. கருணாநிதியின் குடும்ப வருமானத்தை அதிகரிக்கும் நோக்கத்தில் தான், தமிழகத்தில் செயல்படுத்தப்படும் ஒவ்வொரு திட்டமும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இவற்றிற்கு எல்லாம் மகுடம் வைத்தாற்போல் அமைந்தது தான் ஒரு லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழல். இந்த பணத்தை வைத்தே தமிழகத்தை யாருமே நினைத்து பார்த்திருக்க முடியாத அளவுக்கு மேம்படுத்தியிருக்கலாம்.இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்