Saturday, September 4, 2010

முதல்வர் விழாக்கள்: மாற்றம் வருமா?








ஓட்டம் ஓடி உப்பு வாங்கி வாடா என்றால் ஒரு நொடியில் வாங்கி வந்து விடுவான் ! அப்படிச் செய்யாமல் அந்த வீட்டில் உள்ள குடு குடு 87 வயது கிழவரின் கையில பத்து காசினை கொடுத்தார்கள் ...கிழவரை தூக்கி ஒரு பல்லக்கில் வைத்தார்கள் ! பல்லக்கினை ஒரு பத்துபேர் சேர்ந்து தூக்கினார்கள் ! மேல தாளங்களை முழங்கினார்கள் ! கூத்தும் கும்மாளமுமாக ஒரு பத்துமைல் தூரம் கிழவரை தூக்கிச் சென்று உப்பு வாங்கி வந்தார்கள் ! இதனைப் பார்த்த மக்கள் என்னமா கிழவர் இன்னும் குடும்பத்துக்கு உழைக்கிறான் என்று பெருமையாக பேசிக்கொண்டார்கள் ! இப்படித்தான் கருணாநிதி இன்று நாட்டுக்கு உழைக்கிறார் ! வயதோ 87 .... ஒன்றுக்கு இரண்டு மனைவிகள்...உபத்திரவத்திற்கு கணக்கு வழக்கு இல்லாத பிள்ளை குட்டிகள் ...கதை வசனம் சினிமா கூத்து கும்மாளம் பாராட்டுக் கூட்டம் துதிபாடிகளின் சந்திப்பு ஏகப்பட்ட தொழில் ..சட்ட விரோத ஊழல் பேரங்கள்...இதுக்கும் மேல கட்சி அப்புறம் அரசியல். இந்த நிலையில இந்த ஆளு முதலமைச்சரா வேலை செய்கிறார் என்று நம்புகிறீர்களா ?..இந்த லட்சணத்துல ஒரு துணை முதலமைச்சர் ..அவரு எப்பவும் இவர தாங்கிகிட்டேதான் நிக்கிறாரு ! வேலை செய்வதாக தெரியல ! அப்புறம் 1008 எடுபிடிகள் ...அவுங்க அப்பன் வீட்டு காசிலிருந்து அல்ல ... எல்லாம் ஏழை மக்களின் காசு ! வஞ்சிக்கப் பட்ட பாமர ஜீவன்களின் ரத்தம் !!!
Comments from one dinamalar வாசகர்