Tuesday, January 12, 2010

தமிழக அரசின் முக்கிய திட்டங்களுக்கான நிதி கலர் 'டிவி' திட்டத்திற்கு ஒதுக்கீடு

தமிழக அரசின் முக்கிய திட்டங்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி, இலவச கலர், "டிவி', காஸ் அடுப்பு, மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்க பயன்படுத்தப்பட்டுள்ளது. கிராமப்புற வளர்ச்சி திட்டங்களுக்கான நிதியை, முக்கியமில்லாத திட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டாமென அரசுக்கு சிபாரிசு செய்துள் ளோம்,'' என தமிழக, புதுச்சேரி இந்திய தணிக்கை முதன்மை அதிகாரி சங்கர் நாராயணன் தெரிவித்துள்ளார்.



அவர், மேலும் கூறியதாவது:தமிழகத்தில், கடந்தாண்டு மார்ச் வரை கிராமப்புறங்களில் அமல்படுத்தப்பட்ட திட்டங்கள் மற்றும் அதற்காக ஒதுக்கப்பட்ட கோடிக் கணக்கான ரூபாய் பற்றி, தணிக்கை ஆய்வில் எடுத்துக் கொள்ளப்பட்டது.கிராமப்புறங்களில் குளம் வெட்டுதல், வாய்க்கால் வெட்டுதல் போன்ற நீர் ஆதார வசதியை மேம்படுத்துதல் மற்றும் உள் கட்டமைப்பு வளர்ச்சி திட்டங்களுக்கு உறுதுணையாக, "அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி' திட்டம் உள்ளது.ஆறு மாவட்டங்களில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் நடத்தப்பட்ட ஆய்வில், இத்திட்டத்திற்கு பயன்படுத்தப்பட வேண்டிய 120.98 கோடி ரூபாய், முக்கியமில்லாத திட்டங்களுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.முக்கிய திட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி, இலவச கலர் "டிவி', இலவச காஸ் அடுப்பு, முதியோருக்கான பென்சன், மகளிர் உதவிக் குழுவினருக்கு கடன் மற்றும் தள்ளுபடிக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.



ஒரு சில நகராட்சிகளில், வளர்ச்சி திட்டங்களுக்கான நிதி, பிற திட்டங்களுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. இவ்விவரங்கள் அடங்கிய பட்டியலை, கடந்த திங்கள் கிழமை, சட்டசபையில் தாக்கல் செய்துள்ளோம்.உள்ளாட்சி அமைப்புகளில் ஒரு பணியை எடுத்துக் கொள்வதற்கு முன், அப்பணியை எப்படி செய்ய வேண்டும் என்ற முன்னெச்சரிக்கை இல்லாமல், பல வேலைகளை திட்டமிடாமல் செய்து, மக்கள் பணத்தை வீணடித்துள்ளனர்.சென்னை மாநகராட்சி, நிர்வாகம், சுகாதாரம் மற்றும் மகளிர் மேம்பாட்டு திட்டத்தில், மோசமான பணியை செய்துள்ளது. பொதுமக்களின் உடல் நலனில் அக்கறை செலுத்துவதற்கு, சுகாதார ஆய்வாளர்கள் போதிய அளவில் இல்லை.



இப்பிரச்னையால், குழந்தைகள் மற்றும் பெண்கள் நலன் கவனிக்கப்படவில்லை என்பது தெளிவாக தெரிகிறது. சுகாதார மையங்களில் உயிர் காக்கும் மருந்துகளான "பென்சிலின், பாரசிட்டமால்' போன்ற மருந்துகளின் இருப்பு போதிய அளவு இல்லை.உள்ளாட்சி அமைப்புகளில் சுகாதார ஆய்வாளர்களின் எண்ணிக்கை போதுமான அளவில் இல்லாததால், கலப்பட உணவு மற்றும் சுகாதாரமற்ற தண்ணீரின் மாதிரிகளை சோதனை செய்ய முடிவதில்லை.இதனால், பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. முக்கிய திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை, இலவசங்களுக்கு பயன்படுத்த வேண்டாம் என, அரசுக்கு சிபாரிசு செய்துள்ளோம்.இவ்வாறு சங்கர் நாராயணன் கூறினார்.

Monday, January 11, 2010

About Freebies - JJ

மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பின் ஆண்டு சதவீதம், அ.தி.மு.க., ஆட்சியில் 11.89 ஆக இருந்தது, 4.55 சதவீதமாக வீழ்ச்சி அடைந்தது ஏன்?,'' என்று இரு ஆட்சிகளின் புள்ளி விவரங்களை கோடிட்டு காட்டி, சட்டசபையில் ஜெயலலிதா கேள்வி எழுப்பினார்.

சட்டசபையில் ஜெயலலிதா பேசியதாவது: முந்தைய தி.மு.க., ஆட்சியில் நிதி நிலைமை சீர்குலைந்து மோசமான நிலையில் தான், அ.தி.மு.க., அரசு பொறுப்பேற்றது. அதன்பின், நிதிநிலையை சீர்படுத்தி, மீண்டும் தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு சென்றோம்.
ஆனால், தற்போது மீண்டும் மாநிலத்தின் பொருளாதார நிலை மிகவும் மோசமடைந்து வருகிறது. 2009-10ம் ஆண்டுக்கான பட்ஜெட் திட்ட மதிப்பீட்டில், ஒட்டுமொத்த கடன் சுமை 85 ஆயிரத்து 395 கோடியே 84 லட்சம் ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2005-06ல் அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் வருவாய் உபரி 1,951 கோடி ரூபாயாக இருந்தது. அதே நேரத்தில், நிதிப்பற்றாக்குறை 2,251 கோடி ரூபாயாக இருந்தது. தற்போது தி.மு.க., அரசின் 2009-10ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், வருவாய் பற்றாக்குறை 1,024 கோடி ரூபாய் என்றும், நிதிப் பற்றாக்குறை 11 ஆயிரத்து 824 கோடி ரூபாய் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
கடந்த ஆண்டு பிப்ரவரி 17ம் தேதி நிதித்துறை செயலர் அளித்த பேட்டியில், "தமிழகத்தின் ஒட்டுமொத்த கடன் சுமை 83 ஆயிரம் கோடி ரூபாய் என்றும், ஆண்டு வட்டியாக 6,000 கோடி ரூபாய் செலுத்தப்பட்டு வருகிறது' என்றும் குறிப்பிட்டுள்ளார். அதன்பின், ஒரு ஆண்டு கடந்துவிட்டது. இப்போது, மாநிலத்தின் ஒட்டுமொத்த கடன் தொகை 90 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்து விட்டதாக தகவல் வருகிறது.
இவ்வளவு கடன் வாங்கிய நிதியை, சரியான வழியில் செலவு செய்யப்படாதது தான், பொருளாதார சீர்குலைவுக்கு காரணம். ஒன்றுக்கும் பயனில்லாத இலவச கலர் "டிவி' போன்ற இலவச பொருட்கள் வழங்குவதற்குத் தான், கடனாக பெற்ற நிதி செலவழிக்கப்படுகிறது. கடனாக பெறும் தொகையை, அதிக வருவாய் தரக்கூடிய இனங்களில் செலவு செய்யப்படவில்லை.
கடனாக பெற்ற நிதியில் இருந்து, தொழிற்சாலை இல்லாத பகுதிகளில் புதிதாக தொழிற்சாலை ஆரம்பித்திருந்தால், அதன் மூலம் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் வேலை வாய்ப்பு பெற்றிருப்பர். அவர்கள் வேலைக்குச் சென்று, அவர்களே வீடு கட்டிக் கொள்வார்கள்.
கலர் "டிவி' வாங்கிக் கொள்வார்கள். அவர்களுடைய தேவையை அவர்களே சுயமாக பூர்த்தி செய்து கொள்வதற்கு ஏற்ற சூழ்நிலையை அரசு உருவாக்க வேண்டும். இதுதான், நல்ல ஆரோக்கியமான சமுதாயத்திற்கு அடையாளம்.
அப்படி செய்வதற்கு பதில், தி.மு.க., அரசு தமிழகத்தை திவாலாகும் நிலைக்கு தள்ளிக்கொண்டு இருக்கிறது. தி.மு.க., அரசின் தவறான பொருளாதார கொள்கையால், வருவாய் பாதிக்கப்பட்டுள்ளது. வரிகள் மூலம் வரும் வருவாய் பலவீனமடைந்துள்ளது. பற்றாக்குறை பெரிய அளவில் இருக்கிறது. விலைவாசியும் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. மீண்டும் இந்த அரசு, தமிழகத்தை அதல பாதாள அழிவுக்கு அழைத்துச் சென்று கொண்டிருக்கிறது.
மாநிலத்தின் ஒட்டுமொத்த உற்பத்தி வளர்ச்சி வீதம், அ.தி.மு.க., ஆட்சி காலமான 2004-05ல் 11.45 சதவீதமாகவும், 2005-06ல் 11.89 சதவீதமாகவும் இருந்தது. இந்தியாவில், தமிழகம் முதல் இடத்தில் இருந்தது. இது, 2007-08ல் 4.41 சதவீதமாகவும், 2008-09ல் 4.55 சதவீதமாகவும் கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது.
தேசிய அளவில், சட்டீஸ்கர், ஜார்க்கண்ட் போன்ற சிறிய மாநிலங்களை விட, கடைகோடி நிலையில் இன்று தமிழகம் இருக்கிறது. இது போன்ற நிலையில், சில கேள்விகளை கேட்க விரும்புகிறேன்.
தமிழகத்தின் ஒட்டுமொத்த கடன் சுமை எத்தனை கோடி ரூபாய்?
21 லட்சம் வீடுகளை கட்டித்தர பணம் எங்கிருந்து பெறப் போகிறீர்கள்?
மாநில மொத்த உற்பத்தி மதிப்பின் ஆண்டு வளர்ச்சி வீதத்தில் ஏன் இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது? இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்?

Sunday, January 10, 2010

Do Not Give Free Stuff - I Like this comment



All our tax money going vain to satisfy one MK family. What to do? This is the fate of Tamil Nadu. At this moment it is not easy job to correct the educated/uneducated peoples mind. Peoples are minds totally corrupted by MK. Even if u try to convey to the peoples they will be against you. This is due to lack of un education at the rural sides. And these peoples votes are very important for MK. You have to note one thing here, MK is not working for peoples. Working for votes to be in the power. Really if he thinks about the people or country development he will not do like this. He wants to keep the peoples in the same condition i.e away from education and want use their power (vote). That’s why he announced all the free scheme.

1.1 KG rice/1Rupee:

a. By this Poor peoples no need to go to work. Due to this they will become lazy and it leads no need to earn money for their children’s education/development. These children also will become uneducated and will follow the parent’s way.

b. Rice robbery in the ration by ministers and DMK party peoples.

c. Waste of peoples TAX money to compensate the lose incurred to reduce the rice price.

2. Free TV:

a. This allows very big robbery/bribes purely for the MK family and members.

b. Poor DMK people will get it and will sell it outside for the lower price. Because no money to get the cable connection and pay for (no)current bill. The buyers are DMK party members. Buying at low price and Selling it in the other state for the reasonable price.

c. Only the lower middle class people will keep the TV and watching only

Kalignar and SUN TV’s. The competition between SUN TV and Kalaignar TV’s is artificially created by MK for his own benefit. This is purely an idea to divert the people and Keep their mind away from other media’s and channels.

d. Poor people will watch all the program which is in favor of MK family. They will be Isolated from the world.

e. End of the show waste of peoples TAX money.

Employment

Instead of wasting the money like above, why cant Govt. start an industry together with our local private industry. 50%-50%. The management will be by Private to get good profit. The 50% manpower recruitment by Government through Employment office. The 50% of the recruitment by Private industry through college campus interview etc. And permission to private industry to recruit experienced people. Govt can put an committee to monitor the progress/profit.

So the government can make lot of new industry and also can make whatever industry currently missing in the Government list.

The conclusion is we can make TN strong i.e. W/O unemployment if we use the money in the right way. Peoples have brain they have to think twice before get the free item.

But the changing the current peoples mind is not easy job as I told earlier. The only way is third world war and India especially TN should be affected more to get rid off all the above useless peoples including me. At least the next generation (like what happened in Japan after Second World War) will be good.

By M Siva,Dubai,United Arab Emirates 1/10/2010 11:51:46 AM IST

தமிழக அரசின் 2010ம் ஆண்டுக்கான கவர்னர் உரையில், இலவசங்கள் அள்ளித் தெளிக்கப்பட்டதை அகில இந்தியாவும் ஆச்சரியமும், கிண்டலும் கலந்த உணர்வுடன் கவனித்து, கருத்துக்களை வெளியிட்டுள்ளது. பிரபல ஆங்கில பத்திரிகை ஒன்று, "தமிழக அரசின் நல்வாழ்வுத் திட்டம் எனும் போர்வையிலான இலவசங்கள், ஒரு கடிதம் அதன் உறையை விட பெரிதான தாளில் எழுதப்பட்டு, அந்த உறையினுள் திணிக்க முடியாத அளவு உள்ளது' என கிண்டலடித்துள்ளது. அதாவது, பட்ஜெட்டில் பணம் இருக்காது எனக் கூறுகிறது இந்தப் பத்திரிகை.



பொருளாதார நிபுணர்களும், சமூக, அரசியல் ஆய்வாளர்களும், "ஓட்டு வங்கி அரசியலின் உச்சக்கட்டம்' என, இந்த இலவசங்களை குறிப்பிட்டு, தங்கள் கவலையை வெளிப்படுத்துகின்றனர். மத்திய அரசின் 2001ம் ஆண்டு கணக்குப்படி, தமிழகத்தில் 36 லட்சத்து 32 ஆயிரத்து 119 குடும்பங்கள் தான் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவை. ஆனால், ஜூன் 16, 2008 கணக்குப்படி, தமிழக அரசு, 59 லட்சத்து 55 ஆயிரம் குடும்பங்களுக்கு இலவச, "டிவி' அனுமதித்துள்ளது. இது மேலும் அதிகரிக்கப் பட்டு, ஏழைகள் மட்டுமின்றி, கலர் "டிவி' இல்லாத எல்லாருக்கும் இலவச, "டிவி'க்கள் வழங்கப்படும் எனவும் அறிவித்து விட்டனர். தி.மு.க., ஆட்சிக் காலங்களில் அளிக்கப்பட்ட அதிகமான சம்பளம் மற்றும் சலுகைகள் விளைவாக தமிழக அரசின் துண்டு விழும் பட்ஜெட்டில் கணிசமான பகுதி, அரசு ஊழியர் சம்பளம் சார்ந்த செலவுகள். அதாவது, 2008-09ம் ஆண்டுக்கான இறுதி பட்ஜெட் மொத்த செலவினம் 55,402 கோடியே 56 லட்சத்து 6 ஆயிரம் ரூபாய். இதில், 24 ஆயிரத்து 358 கோடி ரூபாய், அரசு ஊழியர், ஆசிரியர் மற்றும் பல அரசு திட்டங்களில் பணிபுரிபவர்களுக்கான சம்பளம் மற்றும் ஓய்வூதியம் சார்ந்த செலவினங்கள். இது, பட்ஜெட்டில் 52 சதவீதம். உலகின் எந்த பணக்கார, நடுத்தர நாடுகளிலும் பட்ஜெட்டில் இவ்வளவு சதவீதம் ஊழியர் செலவினங்களுக்கு ஆவதில்லை.



இந்த முறை ஆட்சியமைக்கப்பட்டு, 44 மாதங்களில் தி.மு.க., அரசு அள்ளித் தெளித்த இலவசங்கள், சலுகைகள் அதிகமாகி, நமது பட்ஜெட்டில் வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கு அடிகோலும் கட்டமைப்பு வசதிகளுக்குத் தேவையான நிதி, அறவே அற்றுப் போகும் சூழ்நிலை உருவாகியுள்ளது. கடன் தள்ளுபடிகள், குறிப்பாக தொழில் தொடங்க வாங்கப்படும் கடன்கள் தள்ளுபடி செய்யப்படுவது, அடுத்து கடன் பெறுபவர்கள் யாரும் கடனை திருப்பிச் செலுத்தாத மனநிலையை உருவாக்கும். இந்த அடிப்படை உண்மையை அரசு அதிகாரிகள் பல முறை அரசியல் தலைவர்களுக்கு, குறிப்பாக முதல்வர்களுக்கு எடுத்துக் கூறியிருக்கின்றனர். உயர் அதிகாரிகள் பலரும் முதல்வரின் கவனத்தைக் கவர, போட்டி போட்டு இலவசம் மற்றும் நடைமுறைக்கு ஒவ்வாத பல செலவினங்களை உருவாக்கி, நமது மாநில பொருளாதாரத்தை பாழடித்து விட்டனர்.



தமிழக அரசு தனது பட்ஜெட்டை, துண்டு விழாத வகையில் திட்டமிடல் வேண்டும். அரசு கடனுக்கு வட்டியாக, கடந்த ஆண்டு 6,227 கோடி ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது. கடன் தொகை 71 ஆயிரத்து 668 கோடி ரூபாயை தாண்டிவிட்டது. மக்களுக்கு பொது நன்மைகளும், பின்வரும் சந்ததியினருக்கு வளமான வாழ்க்கைத் தரமும் உருவாக, ஏழைகள் நிறைந்த ஒரு நாட்டில் இரண்டு துறைகள் சிறப்பாக கவனிக்கப்பட வேண்டும். அவை, கல்வி மற்றும் சுகாதாரத் துறைகள். கல்வியில் சமச்சீர் எனும் திட்டத்தை தவறாக புரிந்து கொண்டு, கல்வியின் தரத்தை உயர்த்தாமல், எல்லா பாடத் திட்டங்களையும் சரிசமமாக்கி, தரமான கல்வியை அழித்தொழிக்கும் நடைமுறைகள் ஆரம்பமாகியுள்ளன.



சுகாதாரத்தைப் பொறுத்தவரை, அரசு மருத்துவமனைகள் மற்றும் அடித்தட்டு கிராம சுகாதார மையங்களை வலுப்படுத்தாமல், தனியார் மருத்துவமனைகளை வளப்படுத்தும் காப்பீட்டுத் திட்டத்தை அரசு ஊக்கப்படுத்துகிறது. கிராமப்புறங்களில் 2001ம் ஆண்டு எடுத்த கணக்கெடுப்பின் படி, 21 லட்சம் வீடுகள், "தற்காலம்' என பெயரிடப்படுகின்றனவாம். அவை கூரை மற்றும் மண் சுவர்களால் ஆன வீடுகளாம். அவற்றை நிலையான குடியிருப்புகளாக ஆறு வருடங்களில் மாற்றப் போவதாக, "கலைஞர் வீட்டு வசதி திட்டம்' அறிவிக்கிறது. இத்திட்டத்தில் ஒரு கூரை வீட்டிற்கு 60 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்; கான்ட்ராக்ட் கிடையாது; வீட்டின் சொந்தக்காரரே தனது வீட்டை கான்கிரீட் வீடாகக் கட்டிக்கொள்ள இத் தொகை வழங்கப்படுமாம். நடைமுறைக்கு ஒத்துவராத ஏட்டுச் சுரைக்காய் திட்டம் இது என்பதற்கு, இதை விட சிறந்த காரணம் கிடையாது. மத்திய அரசின் திட்டமான இந்திரா காந்தி குடியிருப்புத் திட்டத்தை பின்பற்றி இத்திட்டம் அமைக்கப்படுகிறது என்பதால், கட்டுமானப் பொருட்களை அரசின் ஊராட்சி அதிகாரிகள் வாங்கி, கூரை வீட்டு ஏழைகளுக்கு கான்கிரீட் வீடுகள் கட்ட அளிப்பார்களாம். இப்பொருட்கள் வாங்க கமிஷன் உண்டல்லவா?



அடுத்து பயனாளிகள் தேர்வு, ஓட்டு வங்கி முறையை பின்பற்றி அடிமட்ட கட்சித் தொண்டர்களால் நடத்தப்படுமா எனும் கேள்வி எழுகிறது. சமத்துவபுரம், காஸ் அடுப்புகள், கலர் "டிவி' வினியோகம் தந்த அனுபவப்படி, கீழ்மட்ட கட்சியினர் தயாரித்த பட்டியல்படி பயனாளிகள் தேர்வு இருக்கும் என, இப்போதே கிராமத்து மக்கள் முணுமுணுக்கின்றனர். எல்லாவற்றையும் விட, மூன்று ஆண்டுகளில் நடந்த இலவசங்களினாலான செலவுகள், நமது பொருளாதாரத்தை வெகுவாக பாதித்துள்ளதை மத்திய அரசு இந்த மாதம் வெளியிட்டுள்ள, "ஸ்டேட் டொமஸ்டிக் ப்ராடக்ட்' (குஈக) எனும் மாநில பொருளாதார வளர்ச்சி குறியீடு வெளிப்படுத்துகிறது.



இதற்கு முழுப் பொறுப்பும், வளர்ச்சித் திட்டங்களை வகுக்காமல், ஓட்டு வங்கி அரசியலுக்காக இலவசங்களை அள்ளித் தெளிக்கும் மாநில அரசே! இது பற்றியெல்லாம் எந்தக் கவலையும் இல்லாமல், வரும் நிதி ஆண்டில் 1,800 கோடி ரூபாயில் இலவச கான்கிரீட் வீடுகள், 400 கோடியில் நவீன சட்டசபை வளாகம், புதிய நூலகம் போன்றவற்றை உருவாக்குகின்றனர். "இப்படி நிறைய செலவுகளை செய்த பின்னர், அவைகள் சரியாக நடக்கின்றனவா என்பதை பற்றி விவாதித்து, குறைகளை திருத்துவதற்காகத்தான், மக்களுக்காக மக்கள் பணத்தில் இந்த நவீன சட்டசபை வளாகம் அமைக்கப்படுகிறது' என, ஜால்சாப்பு வேறு. கிராமப்புறங்களில் திட்டங்கள் நிறைவேறுவதை கிராமப்புறங்களில் நேரடியாக தணிக்கை செய்யாமல், சென்னையில் பளபளக்கும் நவீன அடுக்கு மாடிக் கட்டடங்களில் விவாதித்து மேற்பார்வையிடுவார்களாம். வாழ்க ஓட்டு வங்கி அரசியல்!



- என்.முருகன், சமூகவியலாளர், முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி