என்.கே.கே.பி.ராஜா பதவியில் இருந்து நீக்கபட்டார். ஆனால் அவரின் பினாமிகள், ஆட்களின் கொட்டம் இன்னும் அடங்க வில்லை. இவர்களின் ஆட்டம், அராஜகம், கட்டபஞ்சாயத்து ஈரோடு மாவட்டம் சில பகுதிகள், திருப்பூர் மாவட்டம் - காங்கயம், நத்தகாடையூர் பகுதிகளில் பரவி உள்ளது. இவர்களின் ஆட்கள் சர்வ சாதாரணமாக பாமரன்களை மிரட்டி, வதைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக இவர்களது நிலஆக்கிரமிப்பு, குடுசை போடுதல், ஆள்கடத்தல், கட்டபஞ்சாயத்து, வேலி பிடுங்குதல், பட்டா மாற்றம் செய்வது, மிரட்டலுக்கு பயந்து யாரும் தொழில் செய்ய பயபடும் நிலமை இருக்கிறது.
இரவோடு இரவோடாகா குடிசை போட்டு, ஆட்களுக்கு கிடா விருந்து வைத்து நிலஆக்கிரமிப்பு செய்கிறார்கள். முடியாதபட்சத்தில் கிடைத்தவரை பேரம் பேசி 'சுருட்டிக்கொள்வது' எனும் முயற்சியில் நில உரிமையாளரிடம் பேசுகின்றனர். நாளுக்கு நாள் நில மதிப்பு அதிகரித்து வருவதால், நில உரிமையாளர்களும் பணத்தை கொடுத்து, நிலத்தை திரும்ப பெரும் நிலைமை இருந்து வருகிறது. ஆளும் கட்சி ஆட்கள் என்பதால் யாரும் பகைத்து கொள்ள விரும்புவது இல்லை.
காங்கயம், நத்தகாடையூர், முள்ளிபரம் பகுதிகளில் தினமும் இது போன்ற பிரச்சனைகள் லோக்கல் போலீஸ் கிக்கு வந்தாலும்
இவர்கள் பொதுவாக ஆளும் கட்சி என்பதால் அரசியல் பவரால், கைகள் கட்டுப்பட்ட லோக்கல் போலீஸ், இந்த குற்றவாளிகளை மறைமுகமாகவும், சில நேரங்களில் நேரடியாகவும் உதவி செய்கிறது. காங்கயம் நகரில் என்.கே.கே.பி.ராஜாவின் பினாமிகளின் கட்டப்பஞ்சாயத்து, ரவுடிசம் ஒழிக்கப்படாமல் இருந்து வருகிறது. காங்கயம் போலீஸ் இது போன்ற கேஸ்களை SPக்கு தெரியாமல், நில உரிமையாளரிடம் பேரம் பேசி முடித்து வைப்தாக தகவல்கள் வருகின்றன. இரண்டு நாட்களுக்கு முன்பு,
நிலஆக்கிரமிப்பு சம்பவம் தொடர்பான புகார் பெற்றும் வழக்கு பதியாமல் கிடப்பில் போடப்பட்டதாகா காங்கயம் போலீஸ் மீது புகார் கூறப்பட்டு இருக்கிறது.
இதில் அதிகம் பாதிக்கபடுவது நடுத்தர வர்க்கத்தினர், பாமரன்கள் தான். குருவி போல் சேமித்த பணத்தில் இடத்தை வாங்கும் பாமரன்களிடம், பிரச்னை உண்டு பண்ணி 10 லட்சம் ரூபாய் பணம் கொடு, 20 லட்சம் ரூபாய் பணம் கொடு, சமரசம் பேசலாம் இல்லை என்றால் குடிசை போட்டு ஆக்கிரமிக்கும் இவர்கள், அதை தன் வசப்படுத்த முழு முயற்சி செய்கின்றனர்.
இதனால் நடுத்தர வர்க்கத்தினர், இந்த அபகரிப்பு கும்பலைக் கண்டு அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர். சொத்துக்காக கொலையே நடக்கும் இந்தக் காலத்தில், அரசியல், அதிகாரம் இல்லாத நடுத்தர வர்க்கத்தினர் என்ன தான் செய்ய முடியும்? ஆளும் கட்சி ஆட்கள் மீது கேஸ் போட்டால், பாமரன்கள் குடும்பத்தை மிரட்டலாம், கடத்தலாம். இல்லை கேஸ் தான் நிற்குமா?
கஷ்டபட்டு இடத்தை வாங்கினால் கொஞ்சம்குட சம்பதம் இல்லாத இவர்கள் '10 லட்சம் ரூபாய் பணம் கொடு', '20 லட்சம் ரூபாய் பணம் கொடு' என்பது எப்படி நியாயம் ?
ஒய்வு எடுக்க வேண்டிய வயதில் இரவு பகல் பாராது மக்களுக்குக்கா உழைக்க்ம் கலைஞர் ஆட்சியல், இப்படி தி.மு.கா பெயரை சொல்லி அராஜகம் நடக்கலாமா?
பதவி நீக்க பட்ட ஒருவரின் பினாமிகள் இப்படி அராஜகம் செய்தால், பதவியில் இருக்கும் அமைச்சர், அதிகாரிகளை யார் கேட்பது?
தி.மு.கா வின் மேல் மட்ட அதிரடி நடவடிக்கை காங்கயம் பகுதிக்கு தேவை. தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். கட்சியில் அதிரடி மாற்றங்கள் செய்யபட்டு தி.மு.கா பெயரை சொல்லி அராஜகம் பண்ணும் இவர்களை களைய வேண்டும். இல்லை என்றால் தி.மு.கா வின் ஒட்டு வங்கி ஈரோடு, திருப்பூர் மாவட்டம் - காங்கயம் பகுதிகளில் மிகவும் பாதிக்க படும்.
No comments:
Post a Comment