சட்டசபையில் ஜெயலலிதா பேசியதாவது: முந்தைய தி.மு.க., ஆட்சியில் நிதி நிலைமை சீர்குலைந்து மோசமான நிலையில் தான், அ.தி.மு.க., அரசு பொறுப்பேற்றது. அதன்பின், நிதிநிலையை சீர்படுத்தி, மீண்டும் தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு சென்றோம்.
ஆனால், தற்போது மீண்டும் மாநிலத்தின் பொருளாதார நிலை மிகவும் மோசமடைந்து வருகிறது. 2009-10ம் ஆண்டுக்கான பட்ஜெட் திட்ட மதிப்பீட்டில், ஒட்டுமொத்த கடன் சுமை 85 ஆயிரத்து 395 கோடியே 84 லட்சம் ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2005-06ல் அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் வருவாய் உபரி 1,951 கோடி ரூபாயாக இருந்தது. அதே நேரத்தில், நிதிப்பற்றாக்குறை 2,251 கோடி ரூபாயாக இருந்தது. தற்போது தி.மு.க., அரசின் 2009-10ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், வருவாய் பற்றாக்குறை 1,024 கோடி ரூபாய் என்றும், நிதிப் பற்றாக்குறை 11 ஆயிரத்து 824 கோடி ரூபாய் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
கடந்த ஆண்டு பிப்ரவரி 17ம் தேதி நிதித்துறை செயலர் அளித்த பேட்டியில், "தமிழகத்தின் ஒட்டுமொத்த கடன் சுமை 83 ஆயிரம் கோடி ரூபாய் என்றும், ஆண்டு வட்டியாக 6,000 கோடி ரூபாய் செலுத்தப்பட்டு வருகிறது' என்றும் குறிப்பிட்டுள்ளார். அதன்பின், ஒரு ஆண்டு கடந்துவிட்டது. இப்போது, மாநிலத்தின் ஒட்டுமொத்த கடன் தொகை 90 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்து விட்டதாக தகவல் வருகிறது.
இவ்வளவு கடன் வாங்கிய நிதியை, சரியான வழியில் செலவு செய்யப்படாதது தான், பொருளாதார சீர்குலைவுக்கு காரணம். ஒன்றுக்கும் பயனில்லாத இலவச கலர் "டிவி' போன்ற இலவச பொருட்கள் வழங்குவதற்குத் தான், கடனாக பெற்ற நிதி செலவழிக்கப்படுகிறது. கடனாக பெறும் தொகையை, அதிக வருவாய் தரக்கூடிய இனங்களில் செலவு செய்யப்படவில்லை.
கடனாக பெற்ற நிதியில் இருந்து, தொழிற்சாலை இல்லாத பகுதிகளில் புதிதாக தொழிற்சாலை ஆரம்பித்திருந்தால், அதன் மூலம் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் வேலை வாய்ப்பு பெற்றிருப்பர். அவர்கள் வேலைக்குச் சென்று, அவர்களே வீடு கட்டிக் கொள்வார்கள்.
கலர் "டிவி' வாங்கிக் கொள்வார்கள். அவர்களுடைய தேவையை அவர்களே சுயமாக பூர்த்தி செய்து கொள்வதற்கு ஏற்ற சூழ்நிலையை அரசு உருவாக்க வேண்டும். இதுதான், நல்ல ஆரோக்கியமான சமுதாயத்திற்கு அடையாளம்.
அப்படி செய்வதற்கு பதில், தி.மு.க., அரசு தமிழகத்தை திவாலாகும் நிலைக்கு தள்ளிக்கொண்டு இருக்கிறது. தி.மு.க., அரசின் தவறான பொருளாதார கொள்கையால், வருவாய் பாதிக்கப்பட்டுள்ளது. வரிகள் மூலம் வரும் வருவாய் பலவீனமடைந்துள்ளது. பற்றாக்குறை பெரிய அளவில் இருக்கிறது. விலைவாசியும் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. மீண்டும் இந்த அரசு, தமிழகத்தை அதல பாதாள அழிவுக்கு அழைத்துச் சென்று கொண்டிருக்கிறது.
மாநிலத்தின் ஒட்டுமொத்த உற்பத்தி வளர்ச்சி வீதம், அ.தி.மு.க., ஆட்சி காலமான 2004-05ல் 11.45 சதவீதமாகவும், 2005-06ல் 11.89 சதவீதமாகவும் இருந்தது. இந்தியாவில், தமிழகம் முதல் இடத்தில் இருந்தது. இது, 2007-08ல் 4.41 சதவீதமாகவும், 2008-09ல் 4.55 சதவீதமாகவும் கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது.
தேசிய அளவில், சட்டீஸ்கர், ஜார்க்கண்ட் போன்ற சிறிய மாநிலங்களை விட, கடைகோடி நிலையில் இன்று தமிழகம் இருக்கிறது. இது போன்ற நிலையில், சில கேள்விகளை கேட்க விரும்புகிறேன்.
தமிழகத்தின் ஒட்டுமொத்த கடன் சுமை எத்தனை கோடி ரூபாய்?
21 லட்சம் வீடுகளை கட்டித்தர பணம் எங்கிருந்து பெறப் போகிறீர்கள்?
மாநில மொத்த உற்பத்தி மதிப்பின் ஆண்டு வளர்ச்சி வீதத்தில் ஏன் இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது? இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்?
ஆனால், தற்போது மீண்டும் மாநிலத்தின் பொருளாதார நிலை மிகவும் மோசமடைந்து வருகிறது. 2009-10ம் ஆண்டுக்கான பட்ஜெட் திட்ட மதிப்பீட்டில், ஒட்டுமொத்த கடன் சுமை 85 ஆயிரத்து 395 கோடியே 84 லட்சம் ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2005-06ல் அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் வருவாய் உபரி 1,951 கோடி ரூபாயாக இருந்தது. அதே நேரத்தில், நிதிப்பற்றாக்குறை 2,251 கோடி ரூபாயாக இருந்தது. தற்போது தி.மு.க., அரசின் 2009-10ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், வருவாய் பற்றாக்குறை 1,024 கோடி ரூபாய் என்றும், நிதிப் பற்றாக்குறை 11 ஆயிரத்து 824 கோடி ரூபாய் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
கடந்த ஆண்டு பிப்ரவரி 17ம் தேதி நிதித்துறை செயலர் அளித்த பேட்டியில், "தமிழகத்தின் ஒட்டுமொத்த கடன் சுமை 83 ஆயிரம் கோடி ரூபாய் என்றும், ஆண்டு வட்டியாக 6,000 கோடி ரூபாய் செலுத்தப்பட்டு வருகிறது' என்றும் குறிப்பிட்டுள்ளார். அதன்பின், ஒரு ஆண்டு கடந்துவிட்டது. இப்போது, மாநிலத்தின் ஒட்டுமொத்த கடன் தொகை 90 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்து விட்டதாக தகவல் வருகிறது.
இவ்வளவு கடன் வாங்கிய நிதியை, சரியான வழியில் செலவு செய்யப்படாதது தான், பொருளாதார சீர்குலைவுக்கு காரணம். ஒன்றுக்கும் பயனில்லாத இலவச கலர் "டிவி' போன்ற இலவச பொருட்கள் வழங்குவதற்குத் தான், கடனாக பெற்ற நிதி செலவழிக்கப்படுகிறது. கடனாக பெறும் தொகையை, அதிக வருவாய் தரக்கூடிய இனங்களில் செலவு செய்யப்படவில்லை.
கடனாக பெற்ற நிதியில் இருந்து, தொழிற்சாலை இல்லாத பகுதிகளில் புதிதாக தொழிற்சாலை ஆரம்பித்திருந்தால், அதன் மூலம் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் வேலை வாய்ப்பு பெற்றிருப்பர். அவர்கள் வேலைக்குச் சென்று, அவர்களே வீடு கட்டிக் கொள்வார்கள்.
கலர் "டிவி' வாங்கிக் கொள்வார்கள். அவர்களுடைய தேவையை அவர்களே சுயமாக பூர்த்தி செய்து கொள்வதற்கு ஏற்ற சூழ்நிலையை அரசு உருவாக்க வேண்டும். இதுதான், நல்ல ஆரோக்கியமான சமுதாயத்திற்கு அடையாளம்.
அப்படி செய்வதற்கு பதில், தி.மு.க., அரசு தமிழகத்தை திவாலாகும் நிலைக்கு தள்ளிக்கொண்டு இருக்கிறது. தி.மு.க., அரசின் தவறான பொருளாதார கொள்கையால், வருவாய் பாதிக்கப்பட்டுள்ளது. வரிகள் மூலம் வரும் வருவாய் பலவீனமடைந்துள்ளது. பற்றாக்குறை பெரிய அளவில் இருக்கிறது. விலைவாசியும் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. மீண்டும் இந்த அரசு, தமிழகத்தை அதல பாதாள அழிவுக்கு அழைத்துச் சென்று கொண்டிருக்கிறது.
மாநிலத்தின் ஒட்டுமொத்த உற்பத்தி வளர்ச்சி வீதம், அ.தி.மு.க., ஆட்சி காலமான 2004-05ல் 11.45 சதவீதமாகவும், 2005-06ல் 11.89 சதவீதமாகவும் இருந்தது. இந்தியாவில், தமிழகம் முதல் இடத்தில் இருந்தது. இது, 2007-08ல் 4.41 சதவீதமாகவும், 2008-09ல் 4.55 சதவீதமாகவும் கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது.
தேசிய அளவில், சட்டீஸ்கர், ஜார்க்கண்ட் போன்ற சிறிய மாநிலங்களை விட, கடைகோடி நிலையில் இன்று தமிழகம் இருக்கிறது. இது போன்ற நிலையில், சில கேள்விகளை கேட்க விரும்புகிறேன்.
தமிழகத்தின் ஒட்டுமொத்த கடன் சுமை எத்தனை கோடி ரூபாய்?
21 லட்சம் வீடுகளை கட்டித்தர பணம் எங்கிருந்து பெறப் போகிறீர்கள்?
மாநில மொத்த உற்பத்தி மதிப்பின் ஆண்டு வளர்ச்சி வீதத்தில் ஏன் இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது? இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்?
No comments:
Post a Comment